4 மாத நிலுவை உதவித்தொகை வழங்க கோரி தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தொழிலாளர் நலவாரிய சங்கத்தினர் முதியோருக்கான மாத உதவித்தொகை 4 மாதமாக வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் நலவாரிய உருப்பினர்கள திரளாக கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
, கோவில்பட்டி தாலுகா தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தொழிலாளர் நல வாரியத்தில் முதியோர் உதவித்தொகை ரூ.1000 வீதம் வாங்கும் முதியோர் அதிகமாக இருக்கிறார்கள். தற்போது 4 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக நல வாரியம் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வரவில்லை.
தொழிலாளர் நல வாரியத்தில் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1000 என்பதை ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பாக்கி நிலுவை தொகையையும் உடனடியாக கொடுப்பதுடன், மாத மாதம் ஓய்வூதியம் குறிப்பிட்ட தேதியில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.