• May 9, 2024

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி உடுக்கை அடித்து த. மா. கா.நூதன போராட்டம்

 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி உடுக்கை அடித்து த. மா. கா.நூதன போராட்டம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில கட்சி கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுக்கை வாசிப்பாளர் தட்சிணாமூர்த்தி உடுக்கை அடித்தபடி மது ஒழிப்பு சம்பந்தமான பாடலைப் பாடினார். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :-

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *