• June 6, 2025

கோவில்பட்டியில் மாநில பெண்கள் ஆக்கி போட்டி

 கோவில்பட்டியில் மாநில பெண்கள் ஆக்கி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குள்ம் பாரதி ஆக்கி கிலம் நடத்தும் மாநில அளவிலான பெண்கள் ஆக்கி சேம்பியன்ஷிப் போட்டி தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது.

தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி மைதானத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு கரிதா சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் பேச்சியம்மாள் காசிராஜன் தலைமை தாங்கினார். பாரதி ஆக்கி கிளப் செயலாளர் சந்தனராஜ் வரவேற்றார்.

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிளிபட்டி முர்கேசன், ஊர்த்தலைவர் அசோக்குமார், தூத்துக்குடி ஆக்கி யூனிட் செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் முன்னிலை வகித்து போட்டியை தொடக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி சிறப்பு விளையாடு விடுதி பயிற்சியாளர் முத்துகுமார், மேலாளர் சிவா ஆக்யோர் கலந்து கொண்டனர், முடிவில் ஆனந்த பிரபாகரன் நன்றி கூறினார்.

போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. இன்றைய ஆட்டத்தை ராசிகள் ஆரவாரத்துடஞ் கண்டு களித்தனர்,

இன்று காலையில் திட்டங்குளம் பாரதி ஆக்கி இலுப்பையூரணி ஆக்கி கிளப் அணியும் மோதின. இதில் பாரதி ஆக்கி கிளப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சிவகாசி ஷான் ஆக்கி கிளப்பினரும் ஈரோடு ஹோம் ஆக்கி கிளப் அணியும் மோதின. இதில் ஈரோடு ஹோம் ஹாக்கி கிளப் அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் லட்சுமி அம்மாள்ஆக்கி அகாடமி அணியினரும் ராஜீவ் காந்தி ஆக்கி கிளப் அணியினரும் மோதினர் இதில் ராஜீவ் காந்தி ஆக்கி கிளப் அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *