தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது; அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன

தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2 வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று ((சனிக்கிழமை) காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரெயில் தூத்துக்குடி மேலூர் ரெயில்நிலையத்தில் நின்று சென்றது. பயணிகள் மகிழ்ச்சியுடன் இறங்கி சென்றனர்.ர வெளியூர்களில் இருந்து தூத்துக்குடி வந்து திரும்பி செல்லும் அனைத்து ரெயில்களும் மேலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி, தூத்துக்குடியில் இருந்து நெல்லை மற்றும் வாஞ்சி மணியாச்சி வழித்தடங்களில் பயணம் செய்யும் மக்கள் கீழ்க்காணும் அட்டவணையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

