கோவில்பட்டியில் மாநில பெண்கள் ஆக்கி போட்டி மே 5-ந்தேதி தொடக்கம்
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது.
கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மே 5 முதல் 7 வரை இப்போட்டி நடக்க உள்ளது இப்போட்டியில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. திருவண்ணாமலை விளையாட்டு விடுதி, புதுக்கோட்டை விளையாட்டு விடுதி, KOM புளியம்பட்டி, ஆக்கி யூனிட் ஆப் திருப்பூர், சாம்பியன் ஆக்கி அணி சங்கரன்கோவில், APJ அப்துல் கலாம் மற்றும் புனித ஜூட்ஸ் சிவகங்கை , பத்மவாணி கலைக் கல்லூரி சேலம் , அரசு கலைக் கல்லூரி கடையநல்லூர், ஜான் ஆக்கி அணி சிவகாசி, டவுன் ஆக்கி கிளப் தூத்துக்குடி,
கோவில்பட்டியில் இருந்து கூசாலிப்பட்டி AMC, திட்டங்குளம் பாரதி ஆக்கி கிளப், இலுப்பையூரணி ஆக்கி கிளப் ஆகிய அணியினர் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள் தினமும் காலை 3 போட்டிகளும் மாலை 3 போட்டிகளும் நடைபெறும்
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக துணைச் செயலாளர் வேல்முருகன், முகேஷ் குமார், பிரேம் குமார், ஜெகதீஸ்வரன், கார்த்திக் ராஜா, ஆகியோர் செய்து வருகிறார்கள்
மேற்கண்ட தகவல்களை ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் முனைவர் சே.குருசித்ர சண்முகபாரதி தெரிவித்து உள்ளார்…