தூத்துக்குடி புத்தக திருவிழா 7-ம் நாள் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் 4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் ஜோ டி குருஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மிஸ்டர்.ஜிகே ஆகியோர் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (27/04/2023) நேற்று உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில், ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ச. தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.