• May 20, 2024

கோவில்பட்டி ரசிகர்களுக்கு விருந்து : ஆக்கி திருவிழா மே 18 தொடக்கம்

 கோவில்பட்டி ரசிகர்களுக்கு விருந்து : ஆக்கி திருவிழா மே 18 தொடக்கம்

பழைய படம்

கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிக கடந்த 11 ஆண்டுகளாக ச நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் அதே போல லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது  அகில இந்திய ஆகிப் போட்டிகள் டெல்லி, ஆக்கி இந்தியாவின் அனுமதியுடன் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது. 

இப்போட்டியின் தொடக்க விழா மே 18ம் தேதி மாலை 5. மணி அளவில் நடைபெற உள்ளது. டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நடுவர்கள் கலந்து கொண்டு போட்டியை நடத்த உள்ளனர். 

இப்போட்டியில் கலந்து கொள்ள அகில இந்திய அளவில் பல்வேறு அணிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செகந்திராபாத், யூனியன் பேங்க் – மும்பை, ஈஸ்ட் கோஸ்ட் ரெயில்வே – புவனேஷ்வர், கனரா பேங்க் – பெங்களூரு, இந்தியன் பேங்க் – சென்னை, சி.ஏ.ஜி. – டெல்லி மற்றும் எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் – கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளன.

இப்போட்டிகள்  கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவுகள் தங்குமிட வசதி, உணவு அனைத்தும் அறக்கட்டளையினரால் வழங்கப்படுகிறது.

தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு போட்டியும் மாலை 4.30 மணிக்கு ஒரு போட்டியும் 6.30 மணிக்கு மற்றொரு  போட்டியும் இரவு 8.15 மணிக்கு இன்னொரு  போட்டியும் என  மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.

போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.75,000, மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் , நான்காவது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசுடன்  லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இப்போட்டிக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி , தாளாளர்  கே.ஆர்.அருணாசலம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் தலைமையில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.மதிவண்ணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஆக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *