கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில், பள்ளிக்கூட மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு
கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமியில் ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
அனுபாலா இருதய மையம் மற்றும் பெண்கள் சுகாதார கிளினிக் டாக்டர் தீபா கலந்து கொண்டு மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி செயலாளர் கண்ணப்பன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.சேர்மன் தீபன்ராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஜே.காம். சேர்மன் அருண்பிரசாத், பள்ளி முதல்வர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.