கோவில்பட்டியில் துணிகரம்: காய்கறி கடைக்காரர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு.
![கோவில்பட்டியில் துணிகரம்: காய்கறி கடைக்காரர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு.](https://tn96news.com/wp-content/uploads/2023/02/218e72f0-29b6-4419-97da-9037883f7f4f-850x560.jpg)
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகன் வெங்கடேஷ். இவர் நகராட்சி தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய வெங்கடேஷ் , வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/42c49283-8544-45f1-8207-8c571001e5d8-1-1024x576.jpg)
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது மேலும் அதிர்ச்சி., பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் காணமால் போய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வெங்கடேஷ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமரா கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)