• April 28, 2025

Month: March 2025

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்திய ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பவத்தன்று தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய கப்பல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கப்பலை  தடுத்து நிறுத்துமாறு கடலோர காவல் படைக்கு மத்திய வருவாய் புலனாய்வு […]

தூத்துக்குடி

உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கிட வேண்டும்; முதல் -அமைச்சருக்கு

தமிழ்நாடு பட்ஜெட்டில் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கு குறைந்தபட்சம் 20 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் ஒரு சதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 […]

பொது தகவல்கள்

சர்க்கரை நோயை விரட்டணுமா? தினமும் இந்த விதையை கொஞ்சம் சாப்பிடுங்க…

நம் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மூலிகை பொருள்களில் மிக முக்கியமானது கருஞ்சீரகம். கலோஞ்சி என அழைக்கப்படும் கருஞ்சீரகம். நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீக்கும் வல்லமை கொண்டது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம். சமைக்கும்போது இந்த பொடியை மழைச்சாரல் போல கொஞ்சம் தூவி விட்டால் உடலுக்கு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் இனி நீங்கள் சமைக்கும்போது தினமும் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். […]

தூத்துக்குடி

அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

 தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  “தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களைப் பெற சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது […]

சினிமா

இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு நடிகை பதிலடி

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். இவரது நடிப்பில் கடந்த சமீபத்தில் வெளியான படம்  ‘ரேகாசித்திரம்’. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம்  ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர்’. இந்த படத்தை இயக்குனர் தீபு கருணாகரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகை […]

சினிமா

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம்: நயன்தாரா பற்றி குஷ்பூ கருத்து

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். நேற்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பா, லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த நயன்தாரா பற்றி பேசினார். அவர் கூறுகையில், >’நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் […]

கோவில்பட்டி

எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை :காட்டுப்பகுதியில் பதுங்கிய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் பூவன் மனைவி சீதாலட்சுமி(வயது 70), மகள் ராமஜெயந்தி(48)ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். ராமஜெயந்தியின் தந்தை இறந்து விட்ட நிலையில், கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். கடந்த 3-ந்தேதி தாய்-மகள் இருவரும் தலையணையால் கழுத்து பகுதியில் அமுக்கி கொலை செய்யப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இரட்டை கொலையை தொடர்ந்து இருவரும் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழற்றிகொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர், மறுநாள் நீண்டநேரமாக […]

தூத்துக்குடி

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய 8 ம் தேதி சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மார்ச்-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் 8.3.2025 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10. மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், […]