தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளி குவித்தது. நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022-ம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இவர்களுடைய முழு திருமண நிகழ்ச்சியும் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்தில் வெளியானது. […]
நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி அடுத்ததாக நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். சமீபத்தில் ரஜினி கூலி படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதைப்பற்றி வைரமுத்து சமீபத்தில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:- கடிகாரம் […]
சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். அடுத்த சிறிது நேரத்தில் பேருந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பேருந்து […]
பாகிஸ்தானின் குவெட்டா ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று (நவம்பர்.9) காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் […]
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பம், தாங்கள் பயன்படுத்தி வந்த கார் இனி ஓடாது என்று தெரிந்ததும், அதனை பழைய இரும்பு சாமானுக்குப் போடாமல், தங்கள் குடும்ப உறவுகளில் ஒருவரை போல அதற்கு வெகு சிறப்பாக நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரின் உரிமையாளர் சஞ்சய் பொலாரா, இந்த காரை வாங்கிய பிறகுதான் தங்களது குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் வந்ததாகவும் சமூகத்தில் மதிப்பு மிக்க குடும்பமாக உருவானதாகவும் உருக்கமாக கூறினார். நான் இந்த […]
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட போது இவருக்கு, தமிழக கால்நடை துறை செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெறுகிறார். […]
தளபதி 69 படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய், நேற்று திடீரென ராணுவத்தினரை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் ஒருவராக வளம் வரும் விஜய், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போதே, தற்போது கமிட்டாகி இருக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து […]
உணவு பாதுகாப்புசட்டத்தில் முக்கிய திருத்தங்கள்: பதிவு சான்றிதழ் பெறாவிட்டால் அபராதம்- அதிகாரி எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் .ச.மாரியப்பன்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகமானது உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதில் சில முக்கிய திருத்தங்களை அமுல்படுத்தியுள்ளது. அதன்படி, தெருவில் நடந்து சென்றோ அல்லது தள்ளு வண்டியில் உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றோ கூவி கூவி விற்பனை செய்யும் நடை வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் கட்டணம் ரூ.100/-ல் இருந்து விலக்கு […]