இயக்குநர் பாலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் சிறப்பு கதாபாத்திரத்திலும், நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. […]
மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக். தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இம்முறை சட்டமன்ற தேர்தலில் தனது மகன் சலீல் தேஷ்முக்கை கடோல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட வைத்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அனில் தேஷ்முக் தனது மகனுக்காக நர்கேட் என்ற கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் பெல்பாடா […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 487 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 […]
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையத்தில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக சாலையை உடைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்த பகுதியில் பணிகள் முடிந்தவுடன் மற்ற பகுதிகளில் வேலை நடைபெறும். சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி அண்ணா பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் முனியசாமி கோவில் பகுதியில் […]
முருகப்பெருமானின் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் தெய்வானை.என்ற 25 வயது யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார்.. அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்தார். அப்போது திடீரென யானை அவர்களை கீழே தள்ளி மிதித்தது. இதில் சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.. இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர்காயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். […]
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் – உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. போர் நடக்கும் நாடுகள் நேட்டோ படையில் சேர முடியாது என்பதால் உக்ரைன் நேட்டோ படையில் சேர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி […]
டி.வி.எஸ். அப்பாச்சி பைக் 160 சிசி ஆயில் கூல்டு எஸ்.ஒ.எச்.சி. பவர் புல் எப்.ஐ என்ஜினை கொண்டுள்ளது.இந்த பைக் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. 17.55 பிஎஸ், 9250 ஆர்.பி.எம் .என்ற அதிகபட்ச செயல் திறனை கொண்டுள்ளது.அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவரக்கூடிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அப்பாச்சி பைக்கை இயக்குவதற்கு ஸ்போர்ட், அர்பன், ரெய்ன் என்ற மூன்று வகையான., வாகன ஓட்டும் முறைகள் உள்ளது.பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ, (போசெக்ஸ்-பு) ஆகும்.சக்திவாய்ந்த டபுள் சேனல் சூப்பர் […]
மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரசாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. பின்பு பெண்கள் கோவிலில் கொடுக்கும் […]