திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி

முருகப்பெருமானின் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் தெய்வானை.என்ற 25 வயது யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார்.. அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்தார். அப்போது திடீரென யானை அவர்களை கீழே தள்ளி மிதித்தது. இதில் சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.. இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர்
காயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்ததார். யானை மிதித்து இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
