ஆட்சி முடியும் நேரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த அதிரடி முடிவு

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் – உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. போர் நடக்கும் நாடுகள் நேட்டோ படையில் சேர முடியாது என்பதால் உக்ரைன் நேட்டோ படையில் சேர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கி உள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பைடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பைடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்..அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. இரண்டு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் மத்தியசம் பேசி உள்ளார். டிரம்ப் மத்தியசம் பேசியதற்கு இடையே.. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பைடன் பிறப்பித்துள்ளார். இது ரஷ்யாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
