இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் 103 ரன்கள் […]
நடிகர் சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா.சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘நந்தன்’. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சசிகுமார்,பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டை பெற்றது. ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம், அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. ‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை மறுநாள் (அக்டோபர்.28) முதல் நடைபெறவுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘உறவுகள் ஒன்று கூடி நிறைவுபெற்று, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீப ஒளித்திருநாளான தீபாவளியாகும். அத்தகைய தீபாவளியினை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு […]
மதுரையில் இயல்பு நிலையை கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்றது. என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன். […]
ஜார்க்கண்ட்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. முதல் கட்டமாக நவம்பர் 13-ம் தேதி 43 பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளி கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். […]
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் […]
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில், இந்த தொடர் உச்சக்கட்ட பரபரப்பில் நடைபெற இருக்கிறது. கடந்த நான்கு தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியிருப்பதால் இந்திய அணியிடம் இருந்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று, உள்நாட்டில் மீண்டும் தனது மதிப்பை உயர்த்த ஆஸ்திரேலிய அணி துடிக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பல ஆண்டுகளாக 4 போட்டிகள் கொண்ட […]
சென்னை ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பகுதி எப்பொழுதுமே முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ரிசர்வ் வங்கியின் உள்ளே ஆபத்து அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துவிட்டதோ என பணியில் இருந்த பெண் காவலர் தர்ஷினி பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை லோடு செய்துள்ளார். பின்னர் ஆர்.பி.ஐ […]
தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அவர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இருசக்கர வாகன பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரை போல சில விசயங்களைத் திரும்ப திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, […]
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் கடுமையான மழைப்பொழிவு […]