• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

வூஹான் ஓபன் டென்னிஸ்: 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு சுற்றுகளை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், சகநாட்டு வீராங்கனை வாங் சின்யு […]

சினிமா

புதிய மஞ்சள் வீரனாக கூல் சுரேஷ்: நீக்கப்பட்ட யூடியூபர் டிடிஎப் வாசன்

பைக்கில் பயணம் செய்து அதனை யூடியூபில் வீடியோவாக போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இந்த படத்தை செல் அம் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘திருவிக பூங்கா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து அப்படத்தின் கதாநாயகனும்., பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டிருந்தார். படத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் […]

தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேட்டையன் திரைப்பட காட்சியை நீக்க வேண்டும்;

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் இசக்கிராஜா மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் \கூறி இருப்பதாவது:-  “ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி காந்திநகரில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட அரசு பள்ளியில் ஏராளமான […]

ஆன்மிகம்

கோடி அவதாரம் எடுத்து அசுரனை அழித்த தஞ்சை கோடி அம்மன்

தஞ்சை கோடி அம்மன் கோவில் தற்போது இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர்.எனவே இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். […]

ஆன்மிகம்

பெருமாள் கோவில்களில் துளசியின் முக்கியத்துவம்- அற்புத சக்தி

மகா விஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும்.பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச் சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். துளசியின் வேறு பெயர்கள் பிருந்தா,பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசார, நந்தினி, கிருஷ்ண ஜீவனி, விஸ்வ பூஜிதா. துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட். துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.சங்காபிஷேகத்தில் துளசி சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகா ஞானியாகும் பாக்கியமும்,முக்காலமும் உணரும் சக்தியும் […]

செய்திகள்

10,11,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான 10,11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, செய்முறை தேர்வானது 12-ம் வகுப்பிற்கு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பிற்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பிற்கு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும். பொது தேர்வானது 12-ம் வகுப்பிற்கு அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் […]

செய்திகள்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா

பெண்கள் 9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் […]

செய்திகள்

மராட்டிய  முன்னாள் மந்திரி பாபா சித்திக் படுகொலை.. பிரபல தாதா கும்பல் பொறுப்பேற்பு

மராட்டிய மாநிலத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. 3 நபர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாபா சித்திக் படுகொலைக்கு […]

செய்திகள்

ஆந்திராவில் வினோத தடியடி திருவிழா: 70 பேர் படுகாயம்

கர்நாடகா ஆந்திரா மாநில எல்லையில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவாரகட்டு மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி மலைக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மல்லேஸ்வர சாமி உற்சவம், தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்கு கொண்டு செல்வதற்காக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொள்வது வழக்கம். இதில் வெற்றி பெறும் குழுவை சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தடியடி […]