வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 9 துறைமுகங்களிலும் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 […]
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 462 ரன்கள் குவித்தது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் கான் டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 150 குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் […]
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டு கொலை செய்தால் ஒரு கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனையின் தலைவர் ராஜ் செகாவத் அவர்கள் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் காவல்துறை அதிகாரிக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிப்பதாக கர்னி சேனை அமைப்பு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கர்னி சேனையின் தேசிய தலைவர் […]
தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெங்களூருவில் இருந்து அக்டோபர் 30-ம் தேதி, நவம்பர் 3-ம் தேதி ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்.06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 30-ம் தேதி, […]
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு, பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பிறந்தநாள் வாழ்துகள் அமித்ஷா ஜி. கடினமாக உழைக்கும் தலைவர் அமித்ஷா. பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘தங்கலான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை […]
சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறும் கூறினர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசினர். குறிப்பாக, காவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இருவரும் போதையில் இருந்ததாக […]
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் […]