• June 8, 2025

தீபாவளியை முன்னிட்டு சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

 தீபாவளியை முன்னிட்டு சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் இருந்து அக்டோபர் 30-ம் தேதி, நவம்பர் 3-ம் தேதி ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்.06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 30-ம் தேதி, நவம்பர் 3-ம் தேதி ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.55 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்.06210) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தாம்பரம் – ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் – ராமநாதபுரத்துக்கு நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை வாரம் மும்முறை (வியாழன், சனி மற்றும் திங்கள்) இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (வண்டி எண்.06103) சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மறுமார்க்கமாக, ராமநாதபுரம் – தாம்பரத்துக்கு நவம்பர் 3-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை வாரம் மும்முறை (வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய்) இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (வண்டி எண்.06104) சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *