கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் […]
தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- .தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது = வெள்ளிக்கிழமைக ளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2024 செப்டம்பர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை 13.9.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில். […]
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவிலிருந்து நேற்று சிகாகோ சென்றடைந்தார். விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ் […]
மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. […]
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். ‘அயோத்தி’ வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கிடையில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்‘ திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை ‘உடன்பிறப்பே‘ என்ற […]
`மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம்’ கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த அவர், பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய […]
முருகன் மாநாடு நடத்தியது திமுக கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- .எந்த காலத்திலும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் திமுக அரசு தூங்கு மூஞ்சி அரசாங்கமாக உள்ளது. கர்நாடகா துணை முதலமைச்சர் இங்கு வந்து மேகதாது ஆணை பேசுகிறார். நீர் வளத் துறை அமைச்சர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் இங்கே இல்லை. கர்நாடக துணை முதலமைச்சர் இங்கே […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (வயது33). சரக்கு வாகனத்தின் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச்சென்ற சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் […]
சிட்கோ கட்டிடங்கள் அனுமதி பிரச்சினை: கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழக அரசு சிட்கோ அமைக்க முடிவு எடுத்து கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சி எல்லைக்குள் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்தது. இதற்கான அனுமதி குலசேகரபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.. தற்போது இதில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், சிட்கோ வளாகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை குலசேகரபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் […]