தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13 ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
.தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது = வெள்ளிக்கிழமைக ளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
2024 செப்டம்பர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை 13.9.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில். (www. tnprivatejobs.tn.gov.in) பதிவுசெய்தல் வேண்டும். இந்த மாதாந்திர வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்
.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, Diploma,Any Degree முடித்தவர் அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்வர் . இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை 10: மணிக்கு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகைபுரிந்து இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- இல் உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
