• June 7, 2025

அருப்புக்கோட்டை போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி.மீது தாக்குதல்

 அருப்புக்கோட்டை போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி.மீது தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (வயது33). சரக்கு வாகனத்தின் டிரைவராக  பணிபுரிந்து வந்தார்.

இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச்சென்ற சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது   போராட்டக்காரர்கள், பெண் டிஎஸ்பி. மீது தாக்குதல் நடந்தது. அப்போது அவரது தலைமுடியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *