முருகன் மாநாடு நடத்தியது திமுக கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
.எந்த காலத்திலும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் திமுக அரசு தூங்கு மூஞ்சி அரசாங்கமாக உள்ளது.
கர்நாடகா துணை முதலமைச்சர் இங்கு வந்து மேகதாது ஆணை பேசுகிறார். நீர் வளத் துறை அமைச்சர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் இங்கே இல்லை. கர்நாடக துணை முதலமைச்சர் இங்கே வந்திருந்த போது நீர்வளத்துறை அமைச்சர் போய் அவரை சந்தித்திருக்க வேண்டும்.
அதை சொல்வதற்கு கூட தமிழகத்தில் இங்கு ஆட்கள் இல்லை என்பது தான் வேதனையாக உள்ளது. முதலமைச்சர் அமெரிக்காவில் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கார் டிரைவர் இல்லாமல் ஓடுகிறது இங்கு பார்த்தால் எல்லாம் தள்ளு வண்டியாக உள்ளது. திருவொற்றியூர் தாசில்தார் வண்டியை தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். பேருந்துக்குள் குடை பிடித்து செல்லக்கூடிய சூழல்தான் உள்ளது இது தள்ளுவண்டி அரசாங்கம்.
மதசார்பற்ற நாடு மதசார்பற்ற மாநிலம் ஒரு மதத்திற்கு மட்டும் எப்படி மாநாடு நடத்தலாம் என்பது திமுக கூட்டணியின் கேள்வி, திமுகவை பார்த்து மக்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் மதத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். படிப்பது ராமாயணம் இடிப்பது பிள்ளையார் கோவில் என்பது போல் திமுக செயல் படுகிறது. சனாதான மாநாடு நடத்திவிட்டு பாஜகவை திருப்தி படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தி இருக்கிறார்கள்.
திமுக கூட்டணிகளுக்கு இது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. வருகின்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்கின்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா ஜனநாயக நாடு தமிழ்நாட்டில் ஜனநாயகம் உண்டு யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம் யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம் அப்படி இருக்கும்போது விஜயை கண்டு ஏன் திமுக பயப்படுகிறது? விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும் அதன் ஓட்டு விஜய்க்கு சென்று விடும் என திமுக பயப்படுகிறது.
திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு தான் வரும் இது அடிப்படையான விஷயம் ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறக்கூடிய விஷயம். வாக்குகள் சிதறாது என எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. திமுக மீது கோபம் கொள்பவர்கள் சட்டமன்றத் தேர்தலில் பொருத்தவரை அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
.
