• June 7, 2025

Month: August 2024

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் அறிவிப்பு

ராணிப்பேட்டையில்  மாவட்டங்களுக்கு இடையிலான மாநில  அளவில் சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்துகொண்டு விளையாட இருக்கிறது,. தூத்துக்குடி மாவட்ட அணி C பிரிவில்  இடம்பெற்றுள்ளது.  இப்பிரிவில் ராணிப்பேட்டை, கோயமுத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன  போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன மாநில சாம்பியன் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தமிழக சப் ஜூனியர் ஆக்கி அணிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள்.. போட்டியில் பங்கேற்கும் […]

கோவில்பட்டி

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை விழிப்புணர்வு பேரணி

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இல்லந்தோறும் தேசிய கொடியேற்றிட மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை மற்றும் இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே தேசிய கொடியை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக கோவில்பட்டியில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பட்டி அஞ்சல் துறை சார்பில் நடந்த பேரணிக்கு அஞ்சல் கோட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு:மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 33 பேர் கைது

நாட்டின் 78-வது சுதந்திரத் தினத்தையொட்டி கோவில்பட்டியில் பாஜகவினர் தேசிய கொடியுடன் இலக்குமி ஆலை மேம்பால பகுதியில் இருந்து பிரதான சாலை வழியாக செண்பகவல்லி அம்மன் கோvவில் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்வோம் என பாஜகவினர் தெரிவித்தனர். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாஜகவினர் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் […]

செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி சந்தித்து கோரிக்கை

சிவகங்கை மாவட்டம்  ஆட்சியர் ஆஷா அஜீத்,  காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் ஆகியோரை   மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- இளையான்குடி மகளிர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்று சுவர் எழுப்ப வேண்டும். மேலும் இப்பள்ளியை  25 வருடம் அரசு சாராமல் நிர்வகித்து வந்ததன் அடிப்படையிலும் ஏற்கனவே […]

செய்திகள்

மோசமான வானிலையால் வயநாடு  சாலியாற்றில் தேடுதல் பணி கடினமாக உள்ளது; மீட்பு குழுவினர்

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. சாலியாற்றின் இரு கரைகளிலும் இருந்து உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அடையாளம் தெரியாத உடல்கள் டி.என்.ஏ. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவகால ஸ்கேன் எடுக்கும் வசதி; ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின்  நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரத்ததான கழக நிறுவனர் காளிதாஸ் தலைமை தாங்கினார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகுத்தார்‌. ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. ராஜேந்திரன், காங்கிரஸ் […]

செய்திகள்

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது; மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை ஐஐடி, ஒட்டுமொத்த பிரிவில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது. NIRF தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னணியில் […]