• June 7, 2025

Month: September 2023

செய்திகள்

நிபா வைரஸ்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – மா.சுப்பிரமணியன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய  6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா எல்லையோர தமிழக பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் […]

சினிமா

ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சி: பங்கேற்காதவர்களுக்கு கட்டணத்தை திருப்பித்தரும் பணி தொடங்கியது

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதனால் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு […]

சினிமா

நடிகர் அசோக் செல்வன்-நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம்

தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த “பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்” பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான போர் தொழில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அசோக் செல்வனும், ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’ படங்களில் நாயகியாக நடித்தவரும், […]

செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்ய நாராயணன் (சத்யா). இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவித்துள்ளதாகவும், தன் சொத்து மதிப்பை மறைத்து தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் […]

கோவில்பட்டி

கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

கோவில்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(வயது 58). இவர் சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு காந்தி மைதானம் வழியாக நடந்து வந்தார். அப்போது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.  இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான […]

கோவில்பட்டி

பூவனநாத சுவாமி கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்

தூத்துக்குடி

141 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள்: கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி வழங்கினார்   

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்  முன்னிலையில்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  இன்று  வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் […]

கோவில்பட்டி

பாரதியார் வேடமணிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மகாகவி பாரதியார் 102வது நினைவு தினத்தை முன்னிட்டு எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தில்  நடந்த நிகழ்ச்சியில் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பாரதியார்  வேடம் அணிந்து கலந்து கொண்டனர். ,அவர்கள் பாரதியார் சிலைக்கு  சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.மேலும்  பாரதியின் புகழை பரப்பிடவும், அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திடவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு கிடைத்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் […]

கோவில்பட்டி

சமாதான கூட்டம் : பா.ஜனதா மறியல் போராட்டம் நிறுத்தம்

கோவில்பட்டி – மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாளை  உண்ணாவிரத போராட்டம், 20-ந் தேதி  சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர், […]

தூத்துக்குடி

ஆவணி திருவிழா: திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற […]