கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

கோவில்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(வயது 58). இவர் சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு காந்தி மைதானம் வழியாக நடந்து வந்தார்.
அப்போது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஓடைப்பட்டி மாரியப்பன் மகன் சிங்கராஜ்(28) என்பவர், சுப்புலட்சுமியிடம் நகையை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து அவரை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் கைது செய்தார்.
