பாரதியார் வேடமணிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மகாகவி பாரதியார் 102வது நினைவு தினத்தை முன்னிட்டு எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
,அவர்கள் பாரதியார் சிலைக்கு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.மேலும் பாரதியின் புகழை பரப்பிடவும், அனைவருக்கும் உயர் கல்வி கிடைத்திடவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு கிடைத்திடவும், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.. பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
பாரதி வேடம் அணிந்த மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் டயனா ஜெயந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, வேல்முருகன், நடராஜன், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
