சமாதான கூட்டம் : பா.ஜனதா மறியல் போராட்டம் நிறுத்தம்

கோவில்பட்டி – மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாளை உண்ணாவிரத போராட்டம், 20-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் நீதிப்பாண்டியன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது நகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ஒரு மாதத்திற்குள் பூர்வாங்க பணிகள் நடத்தி முடித்து விரிவாக்க பணி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெறும் என்று தரப்பட்ட உறுதியை ஏற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் ஆகியவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் வீ.வே.ரா.கூறி உள்ளார்.
