• May 20, 2024

Month: June 2023

கோவில்பட்டி

திருப்பாவை பாசுரங்களை கற்ற சிறுவர், சிறுமிகளின் அரங்கேற்றம்-கோலாட்டம்  

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பெற்றெடுத்த கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை முப்பது பாசுரங்களை கோவில்பட்டி லட்சிமி மில் மேல காலனி சமுதாயக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு கற்றுத்தரும் நிகழச்சி நடைபெற்றது. தினமும் மாலை  6 மணி முதல் இரவு 8 ,மணிவரை கற்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை சேவகாலமும், பஜனையும், கோலாட்டமும் சொல்லி தரப்பட்டது. நேற்று 5 -ந் தேதியுடன்  ஒரு மாத பயிற்சி நிறைவடைந்தது. கோவில்பட்டி ஆண்டாள் ரங்கமன்னார் […]

செய்திகள்

தி.மு.க.போல உதட்டளவில் இல்லாமல்,உணர்வுபூர்வமாக இஸ்லாமியர்களை மதிக்கின்ற இயக்கம் அ.தி. மு. க.-டி. ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது :- கண்ணியத்திற்குரிய அண்ணல் காயிதே மில்லத்தின் 128 வது பிறந்த தினவிழா அரசின் சார்பிலே கொண்டாடப்பட்டுவருகிறது.அரசின் சார்பிலே என்று சொல்லும்போது அவரின் பிறந்தநாளை அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டவர் அம்மா.காயிதே மில்லத்தின் நுற்றாண்டுவிழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றபோது அப்போது நானும் அமைச்சராக இருந்தேன். அப்போது அங்கு இருந்த இஸ்லாமிய பெரியோர்கள் அம்மாவிடத்திலே காயிதே மில்லத்தின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வந்த “அரிசி கொம்பன்” யானைக்கு ஸ்பெஷல் குளியல் ஏற்பாடு

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வராம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர்  மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  அதன் பின்னர் அங்கிருந்து  திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இன்று காலை தேனியில் இருந்து லாரியில் ஏற்றி அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது. கம்பத்தில் இருந்து தேனி, உசிலம்பட்டி, விருதுநகர் வழியாக கோவில்பட்டி வந்தது. நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி  விலக்கு பகுதிக்கு […]

கோவில்பட்டி

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் நடத்திய கலச விளக்கு வேள்வி பூஜை

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரோனா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். சக்தி கொடியை மாவட்ட துணை தலைவர் பண்டார முருகன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு […]

கோவில்பட்டி

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மகள் திருமணம்; வைகோ நடத்தி வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், கோவில்பட்டி நகரசபை துணை தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ்-சசிபிரியா தம்பதியரின்  மகள் டாக்டர் எஸ்.ஆர்.ஜனனிக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் துஷார் சிங்குக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்களது திருமணம் இன்று காலை கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.  பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். ம.தி.மு.க. தலைமை […]

கோவில்பட்டி

மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை

கோவில்பட்டி புதுரோடு முத்தையா மால் தெருவில் வைத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க  தலைவர் நேதாஜி  பாலமுருகன்  தலைமை  தாங்கினார்,  முருகேசபாண்டியன், ரத்தினவேல், நாகராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நற்பணி இயக்கத்தை சேர்ந்த   சேகர், முத்துசாமி, கிருஷ்ணசாமி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில்  உலக சுற்றுச்சூழல் தின விழா                                                                           

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று (5-ந் தேதி) கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சிட்கோ சிட்டியில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஜே சி ஐ முன்னாள் தலைவர் முரளி கிருஷ்ணன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை […]

கோவில்பட்டி

வெயில் கொடுமை: பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த நடிகை செல்பி எடுத்து மகிழ்ச்சி  

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பிரபு பாக்கியராஜ் நடிகை சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 2ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. கோவில்பட்டியில் சத்யபாமா சினிமாஸ் அரங்கில் திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த சினிமா தியேட்டருக்கு நேற்று மாலை காட்சி தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்னதாக படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி திடீரென வருகை தந்தார். இது பற்றி அறிந்ததும் அவரை ரசிகர்கள் […]

தூத்துக்குடி

சிந்தனைகள் நேர்மறையாக இருந்தால்  வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும்; மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினரின் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. தாலுகா காவல் நிலையம், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை உள்பட சுமார்  50க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  ரத்த தானம் செய்தனர்.நிகழச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:- ரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு உன்னதமான செயலாகும். நாம் பிறருக்கு […]