• June 7, 2025

Month: May 2023

கோவில்பட்டி

நாலாட்டின்புதூரில் சமுதாய கூடம் திறப்பு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர். கஸ்தூரி, ஒன்றியக் கழக செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ், துணைத் தலைவர் பத்மாவதி, ஒன்றிய கவுன்சிலர் \முத்துமாரி தாமோதரக்கண்ணன் உள்ளிட்டோர்.!கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

*தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  நேற்று பகல் நேரத்தில் திடீரென்று  ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.*  தூத்துக்குடி குரூஸ் பர்னானந்து சிலை சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில், ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று  காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள ரோந்துப்பணிகள் மற்றும் வாகன தணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து […]

செய்திகள்

ஆவடி நாசர் நீக்கம்; டி.ஆர்.பாலு மகன் அமைச்சர் ஆகிறார்-நாளை பதவி ஏற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். முதலாவதாக, ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை எடுக்கப்பட்டு, அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் […]

செய்திகள்

அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் ஓ.பன்னீர்செல்வம் தான்-டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாம் சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் இன்று நடைபெற்றது.இந்த முகாமை தொடங்கிவைத்து முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:- கேள்வி –ஓ.பன்னீர்செல்வம் சபரீசனையும்,டிடிவி தினகரனையும் சந்தித்துள்ளாரே காய்ந்த கொல்லியிலே குதிரை மேய்ந்தால் என்ன,கழுதை மேய்ந்தால் என்ன.அதனால் ஒரு தாக்கமும் ஏற்படபோவதில்லை.ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன் சந்திப்பு என்பது கவுண்டமணி,செந்தில் சந்திப்பு போன்றது.நகைச்சுவையோடு ஒரு கோமாளிதனமான சந்திப்புதான் இது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்ததை யாருக்கு எதிராக தொடங்கினார்.அந்த குடும்பத்திற்கு எதிராக செய்ததார்.அந்த […]

செய்திகள்

தினகரனுடன் சந்திப்பு எதிரொலி : ஓ.பன்னீர்செல்வத்துடன் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியா?

கடந்த 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு வலது கரமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள். ஆனால், அன்று வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தார். பின்னர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தது. இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அன்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தி.மு.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கோவில்பட்டியில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணன் கோவில் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  பூங்கோதை , கொள்கை பரப்பு இணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.. கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; 12-ந் தேதி நடக்கிறது  

தூத்துக்குடியில் மே 12ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 12.5.2023 வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணி அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் .  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவர் மற்றும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கலை மற்றும் கைவினைபொருள்  பயிற்சி வகுப்பு

கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் கலை மற்றும் கைவினை பொருள் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெற்றது. ஜோதிநகரில் உள்ள  ஜே,.சி.பவன் அரங்கத்தில் கோடை விடு,முறையை முன்னிட்டு நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர், முதல் நாள் வகுப்பில் கல்லூரி கலை, இரண்டாவது  நாள் கைவினை கற்கள் பற்றியபயிற்சி வகுப்பு நடந்தது. மூன்றாம் நாள் கல் நிவாரண சிற்பம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தபட்டது. 3 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி […]

செய்திகள்

டி.டி.வி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு; டி.ஜெயக்குமார் விமர்சனம்

அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக அமைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க. விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்க போகிறார், தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது டி.டி.வி. தினகரன், சசிகலா தரப்பினருடன் இணைந்து செயல்படுவாரா? என்ற கேள்விகள் எழுந்தன. தேவைப்பட்டால் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில நேற்று இரவு 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவி களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 20 இல் 4 பள்ளிகள் […]