• June 8, 2025

அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் ஓ.பன்னீர்செல்வம் தான்-டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

 அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் என்றால்  ஓ.பன்னீர்செல்வம் தான்-டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாம் சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் இன்று நடைபெற்றது.இந்த முகாமை தொடங்கிவைத்து முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:-

கேள்வி –ஓ.பன்னீர்செல்வம் சபரீசனையும்,டிடிவி தினகரனையும் சந்தித்துள்ளாரே

காய்ந்த கொல்லியிலே குதிரை மேய்ந்தால் என்ன,கழுதை மேய்ந்தால் என்ன.அதனால் ஒரு தாக்கமும் ஏற்படபோவதில்லை.ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன் சந்திப்பு என்பது கவுண்டமணி,செந்தில் சந்திப்பு போன்றது.நகைச்சுவையோடு ஒரு கோமாளிதனமான சந்திப்புதான் இது.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்ததை யாருக்கு எதிராக தொடங்கினார்.அந்த குடும்பத்திற்கு எதிராக செய்ததார்.அந்த குடும்பத்தை பற்றி அவ்வளவு விமர்ச்சனம் செய்தார். மாஃபியா கும்பல் என்றார்.தமிழகத்தை சூரையாடிய கும்பல் என்றார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை கூறுபோட்டு.,பங்குபோட்டு தமிழகத்தை விற்ற குடும்பம் சசிகலா குடும்பம் என்றார். டிடிவியை பொறுத்தவரையில் அவரைபோல ஒரு கிரிமினல் உலகத்தில் யாரும் கிடையாது. அவரைபோல ஒரு அரசியல் வியாபாரி உலகத்திலேயே பார்க்க முடியாது. அரசியல் துரோகி என்றுகூட சொன்னார்.

தர்மயுத்ததை தொடங்கியபோது  எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகவேண்டும் என்றும் அம்மாவின் மரணத்தில் இந்த குடும்பத்தின்மேல்தான் சந்தேகம் என்று சொல்லிவிட்டு.ஊர் ஊராக சென்று அம்மாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என்று கூறினார்..

தர்மயுத்ததை தொடங்கி மீண்டும் கழகத்திற்கு வந்து  ஒருங்கிணைப்பாளராக ஆனார். அவரின் வேண்டுகோள் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.எனவே விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்றார்.பொதுமக்களும் கேட்கிறார்.இவரும் கேட்கிறார் என்று விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன் அமைத்தபின்னர் எத்தனை  முறை அவருக்கு சம்மன் அனுப்பட்டது. கடைசியாக அங்கு சென்று அம்மாவின் மரணத்தில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார். சசிகலா மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை என்றைக்கும் உண்டு என்றார்.

 எப்படி எல்லாம் அந்தர் பல்டி அடித்தார்.அந்த அளவுக்கு அரசியலில் ஒரு சந்தர்ப்ப வாதம்,அரசியலில் ஒரு துரோகம்,அரசியலில் நிறம் மாறுவது.அரசியலில் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது ஓ.பன்னீர்செல்வம்தான். டிடிவி தினகரனை ஆட்சி இருக்கும்போதே சந்தித்தவர்தான் இவர். என்னை முதலமைச்சராகக்கிவிடுங்கள் என்று கேட்டவர்தான்.சந்தர்பவாதத்தின் மொத்த உருவம்தான் ஓ.பன்னீர்செல்வம்.

இவர் டிடிவியை சந்தித்த காரணத்தினால் கழகத்திற்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது கிடையாது. அவர்கள் வேறு வகையில் கூட்டணி அமைத்து வந்தால் நீங்கள் சேர்த்துகொள்வீர்களா என்று கேட்கிறார்கள்.ஓ.பன்னீர்செல்வம் போல நாங்கள் குழப்பவாதிகள் கிடையாது. நேற்றும் சரி,இன்றும் சரி,நாளையும் சரி ஓ.பன்னீர்செல்வமே,சசிகலாவோ,டிடிவியோ எந்த கால கட்டத்திலும் கட்சியில்  சேர்ப்பதாக இல்லை…இது உறுதியான ஒன்று.அதுபோல கொல்லைப்புறமாக வந்தால் எப்படி என்று கேட்கிறார்கள்..பிஜேபியோடு வந்தால் எப்படி என்றும் கேட்கிறார்கள்..

பிஜேபி அதுபோல நிச்சயமாக செய்யாது.அதுபோல நிர்பந்தத்தை எங்கள் மீது வைக்காது.அதே நேரத்தில் அனைத்து வழியும் அடைக்கட்டதாலே  கண்டிப்பாக கழகத்தின் கதவுகள்,சில அடிமட்ட தொண்டர்கள் வரலாம். ஆனால் இந்த மூன்றுபேருக்கும் கழக கதவுகள் சாற்றப்பட்டுவிட்டது.அவர்கள் எந்த காலத்திலும் கட்சியில் வருவதற்குண்டான வாய்ப்புகள் இல்லை. வரவும் முடியாது.

கடல் கடந்து எப்படி முதலீடு செய்வது என்று ஓ.பன்னீர்செல்வமும்,சபரீசனும் டிஸ்கஸ் செய்திருக்கலாம். திருச்சியில் உங்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்திவிட்டேன்.உங்களுக்கு நன்றி சொல்லும் கூட்டமாககூட இருக்கலாம். மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு உங்களுடைய மேலான ஆதரவு எங்களுக்கு தேவைப்படுகிறது என்று பேசியிருக்கலாம்.

திமுக என்பது தீயசக்தி என்றுதான் புரட்சித்தலைவரும்,புரட்சித்தலைவியும் எங்களுக்கு அடையாளம் காட்டினார்கள்.அந்த தீய சக்தியோடு சேர்ந்துள்ளார்.

ஓபிஎஸ் ஸ்டாலின் உடன் கொஞ்சி குலாவுவதாக சசிகலாவே குற்றம் சாட்டி இருந்தார்.ஓ பி எஸ் க்கு இப்பொழுது சசிகலா என்று வாய் வர வில்லை சின்னமா சின்னம்மா என்று தான் வருகிறது, நேற்று ஒரு வாய் இன்று ஒரு வாய்.ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இரண்டு அமாவாசைகள், இரண்டு அமாவாசைகளும் சேர்ந்துள்ளார்கள் இரண்டு அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடு இருட்டாகிவிடும்.

நரி வலம் வந்தால் என்ன இடம் வந்தால் என்ன எங்களை கடிக்கவில்லை .எங்களிடம் இருந்து கொண்டே ஓ பி எஸ் டி டி வி தினகரனிடம் பேசி உள்ளார், இதை டி டி வி ஒப்புக்கொண்டார் அதற்கு நன்றி.கழகத்தின்  கதவுகள் அடைக்கப்பட்டதால் டி டி வி தினகரணை சந்திப்பது தான் ஒரே வழி என்று அங்கு சென்றுள்ளார்.

இவ்வாறு முன்னாள்  அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *