• June 8, 2025

தூத்துக்குடியில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

 தூத்துக்குடியில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

*தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  நேற்று பகல் நேரத்தில் திடீரென்று  ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.*

 தூத்துக்குடி குரூஸ் பர்னானந்து சிலை சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில், ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று  காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள ரோந்துப்பணிகள் மற்றும் வாகன தணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.*

*இந்த ஆய்வின்போது மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள். நாகராஜ், சதீஷ்குமார், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன், தூத்துக்குடி நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் தசுப்பையா உள்ளிட்ட  காவல்துறையினர் உடனிருந்தனர்.* 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *