• June 7, 2025

Month: April 2023

செய்திகள்

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வக்கீல் நியமனம்

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. ஜெயலலிதா வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 4 […]

செய்திகள்

மதுரை -நத்தம் இடையே 7.5 கி.மீ. தூரத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம்;

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகே இருந்து,  நத்தம் வரை 35 கிமீ தொலைவுக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிமீ தூரத்துக்கு  ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. தூண்கள் […]

செய்திகள்

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், தயாரிப்பாளராக இருந்து வருபவருமான நடிகை குஷ்பு அரசியலில் பிரபலம் ஆகி உள்ளார் என்பதும் அவர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார் என்பதும் அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் திடீரென ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் ‘நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் 24-ம் தேதி திருச்சியில் மாநாடு; பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது. எடப்பாடி பழனிசாமி  கூட்டிய பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது. ஒ.பன்னீர்செல்வம்  தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன. அரசியல் மாயையில் அதிமுக சிக்கியுள்ளது. அ.தி.மு.க. பிளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கில் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோதெல்லாம் மக்கள் தான் நல்ல […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான  சதுரங்க போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சதுரங்க வீரர், வீராங்கணைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாளை  (சனிக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடக்கிறது. போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, மாநில போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா

கோவில்பட்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பொங்கல் 57ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது  அதை முன்னிட்டு காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது  8ம் நாள் நிகழ்ச்சியாக.பூக்குழிதிருவிழா நடைபெற்றது  இரவு 11:30 மணியளவில் சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களும் பூக்களில் இறங்கினார்கள் இதில் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று கோசத்துடன் பூக்குழி இறங்கினார்கள் […]

கோவில்பட்டி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில்  திருக்கல்யாண நிகழ்ச்சி

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. 4-ந்தேதி) திருத்தேரோட்டமும், 5-ந்தேதிதீர்த்தவாரி, தபசு  நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி  அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி […]

கோவில்பட்டி

பெரிய வியாழன் : அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பங்கு தந்தை

இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார்.பெரிய வியாழனான இன்று மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்1.தன் சீடர்களுடன் அமர்ந்து கடைசி இரவு உணவு உட்கொண்டு அப்பம் ரசம் என நற்கருணையை ஏற்படுத்தினார்2.சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் மற்றவர்களுக்கு பணி செய்யுங்கள் என்று கூறினார்

செய்திகள்

கோவில்பட்டி  நகராட்சி  சந்தையில் கடைகள் எண்ணிக்கை குறைப்பு ஏன்? கடம்பூர் ராஜூ கவன

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்குவது தொடர்பாகவும், நகராட்சி தினசரி சந்தை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- கோவில்பட்டியில்  நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறிசந்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை கோவில்பட்டி நகர்மட்டுமின்றி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் 3 பிரிவுகளில் ஓவிய போட்டி; 16-ந் தேதி நடக்கிறது

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் வேடிக்கை கலைஞர் என்ற பெயரில் ஓவிய போட்டி நடத்தப்படுகிறது, 10 வயதுக்கு உட்பட்டோர், 11 ,முதல் 15 வயது வரையிலானவர்கள், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தபடுகிறது. இவர்களுக்கு முறையே இயற்கை காட்சியமைப்பு, கார்ட்டூன் பாத்திரம், பச்சையாக செல்லுங்கள் ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரைய வேண்டும்.ஓவியபோட்டியானது 16—ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை ஜே.சி.பவன் கட்டிடத்தில்  நடக்கும்.  போட்டிகள் நேரம் காலை […]