கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா

கோவில்பட்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பொங்கல் 57ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
அதை முன்னிட்டு காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது 8ம் நாள் நிகழ்ச்சியாக.பூக்குழிதிருவிழா நடைபெற்றது
இரவு 11:30 மணியளவில் சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களும் பூக்களில் இறங்கினார்கள் இதில் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று கோசத்துடன் பூக்குழி இறங்கினார்கள்
ஏராளமானவர்கள் பூக்குழி இறங்குவதை கண்டு களித்தனர்
இரவு சாமக்குடை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாவனை நடைபெற்றது
9ம்நாள் நிகழ்ச்சியாக 108 முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை சட்டமுத்து முருகேஸ்வரி. காந்தாரி அம்மன் கோவில் விழா கமிட்டினர் .தர்மகத்தா. ரவி பாண்டியன்
தலைவர். ஏமராஜ்.,செயலாளர்.மகேந்திரன், பொருளாளர். காந்தாரி முத்து கருப்பசாமி. துணைத்தலைவர் எம். கருப்பசாமி. துணைச் செயலாளர். இளையராஜா,. இணை பொருளாளர் பொன்ராஜ். மற்றும் விழா பொறுப்பாளர்கள்.காந்தாரிராஜ் . பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்
பொங்கல் விழாவை முன்னிட்டு காந்தாரி அம்மன் கோவிலுக்கு
வெளியூர்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் .
