கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சி

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது.
4-ந்தேதி) திருத்தேரோட்டமும், 5-ந்தேதிதீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை சுவாமிகள் திருமண பட்டாடைகள் உடுத்தி மேளதாளத்துடன் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கழுகாசலமூர்த்தி வள்ளி, திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது.இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜைகளை செல்லக்கண்ணுபட்டர், வைகுண்டம்பட்டர், திருமூர்த்திபட்டர், வீரபாகுபட்டர் தர்மராஜ் பட்டர்கள் நடத்தினர்.
கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பிரதோஷ குழு முருகன், பௌர்ணமி கிரிவல குழு மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
