கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் 3 பிரிவுகளில் ஓவிய போட்டி; 16-ந் தேதி நடக்கிறது

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில் வேடிக்கை கலைஞர் என்ற பெயரில் ஓவிய போட்டி நடத்தப்படுகிறது, 10 வயதுக்கு உட்பட்டோர், 11 ,முதல் 15 வயது வரையிலானவர்கள், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தபடுகிறது.
இவர்களுக்கு முறையே இயற்கை காட்சியமைப்பு,
கார்ட்டூன் பாத்திரம், பச்சையாக செல்லுங்கள் ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரைய வேண்டும்.ஓவியபோட்டியானது 16—ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை ஜே.சி.பவன் கட்டிடத்தில் நடக்கும். போட்டிகள் நேரம் காலை 9-11,11-1,2-4 நிறைவு விழா மாலை 5 மணிக்கு நடைபெறும்.
முதல் பரிசாக ரூ,1,500, இரண்டாவது பரிசாக ரூ,. 1000, மூன்றாவது பரிசாக ரூ.750 வழங்கப்படும்,
போட்டியில் பங்கேற்போர் தங்கள் வயதை குறிக்கும் வகையில் அடையாள அட்டை கொண்டுவரவேண்டும்,. A4 சைஸ் சார்ட் வழங்கப்படும்.
ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும்
ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்குரிய கேட்டகரிக்கு உண்டான தீம் வரைய வேண்டும். ஒவ்வொருவருக்கும் போட்டி நேரம் ஒரு மணி நேரம் ஆகும் நடுவர் முடிவே இறுதியானது,
மேற்கண்ட தகவல்களை கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் டி.தீபன்ராஜ் தெரிவித்து உள்ளார். ,
மேலும் தகவல்களுக்கு 94890 50505, 73730 55777 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்
