• June 7, 2025

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் ரூ 2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் ரூ 2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்  வளாகத்தில்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 2 தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

அதே சமயம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையில் உதவி ஆணையர் சங்கர், செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி  தொடங்கி வைத்தார்.

 கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணி,இந்து சமய அறநிலையத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் சத்யன், உதவி பொறியாளர் ரெங்கசாமி , கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைப்ரியா, திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,  மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதிகெளதம், திமுக வர்த்தக அணி நிர்வாகி சேதுரத்தினம், பொறியாளர் அணி ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, சண்முகவேல்,லவராஜா, விஜயக்குமார்(பாஜக),சுதாகுமாரி, உலகராணி,சித்ரா, புவனேஸ்வரி, திமுக நிர்வாகிகள் மணி,மாரிச்சாமி, சின்னத்துரை, ராஜேஷ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *