தூத்துக்குடியில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது கோவில்பட்டி நகர இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தை உதயநிதி ஸ்டாலினிடம் கோவில்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் கா.மகேந்திரன் வழங்கினார். அப்போது நகர செயலாளர் கா.கருணாநிதி உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்,
சென்னை மதுரவாயல் சேக் மானியம், தர்மராஜா கோவில், 7-வது தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 80). இவருடைய மகன் கபாலி (55). இவர், அதே பகுதியில் 4-வது தெருவில் வசித்து வந்தார். நேற்று காலை தனது தாயார் சரோஜா வீ்ட்டுக்கு சென்ற கபாலி, தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கபாலி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சரோஜாவின் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரோஜா, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக […]
சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன? அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், […]
தமிழ் மாதங்கள் பன்னிரண்டிற்கும் தனித் தனியான சிறப்பு உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத மகுடச் சிறப்பான கார்த் திகை விளக்கைப் போல் அம்மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவாரம் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப் படுவதற்குப் புராணப் பாங்கான கூடுதல் கருத்தாடல் ஒன்று உண்டு. சோமன் என்றால் திங்களாம் சந்திரனை குறிக்கும். வாரம் என்றால் நாள். பொது வாக எல்லா நாளையும் வாரம் என்றே சேர்த்து கூறும் அரிதானதோர் வழக்கம் ஒன்று உண்டு. புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என்பனவற்றை […]
கோவிலில் தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாகப் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தேங்காய் ஏன் உடைக்கிறோம். இதில் என்ன தாத்பரியம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்குத் தெரியாது. நாம் தொன்று தொட்டு நினைத்த வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம். முக்கியமாகத் திருமணம், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்னரும் தேங்காய் உடைத்து பூஜை செய்கின்றோம். இதற்கு ஆன்மிகத்தில் இருக்கும் பொதுவான கருத்து, தேங்காயை உடைத்தவுடன் அதன் […]
2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது ‘களவாணி’, ‘வாகை சூடவா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய […]
தாமிரபரணி ஆற்றில் கெண்டை மீன்குஞ்சுகள் வளர்ப்பு: 2 அமைச்சர்கள் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இல்லம் தோறும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று 21.11.22 உலக மீன்வள தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், த. மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கும் நிகழ்வினை தொடக்கி வைத்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர்.கே.சு.பழனிசாமி , தூத்துக்குடி […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதணை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி […]
கோவில்பட்டியில் போகஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா சார்பில் மாவட்ட வில்வித்தை போட்டி மற்றும் தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகள் நடந்தன. துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிகளை கல்லூரி செயலாளர் எஸ்.கண்ணன், முதல்வர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வில்வித்தை போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஸ்கேட்டிங், சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் […]
பிரபல சினிமா கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். இவர் சென்னை தியாகராயநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. மரணம் அடைந்த ஆரூர்தாசுக்கு ரவிச்சந்தர் என்ற மகனும், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகள்களும் உள்ளனர். திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ் சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக […]