தாமிரபரணி ஆற்றில் கெண்டை மீன்குஞ்சுகள் வளர்ப்பு: 2 அமைச்சர்கள் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இல்லம் தோறும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இன்று 21.11.22 உலக மீன்வள தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், த. மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கும் நிகழ்வினை தொடக்கி வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர்.கே.சு.பழனிசாமி , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
