வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக சென்னை எழும்பூர் ‘மெட்ராஸ்-ஐ’ வார்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண் நோய் கடந்த 1918-ம் ஆண்டில் முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டது. இதனால் இதற்கு “மெட்ராஸ்-ஐ” என்று பெயரிடப்பட்டது. கண் இமைகளில் ‘அடினோ’ […]
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-ம் புத்தக் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் இன்று தொடங்கியது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புத்தக திருவிழாவை திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு […]
கோவில்பட்டி செக்கன் ஊரணி தெருவில் உள்ள சுதிக் ஷா பிரபு மருத்துவமனையில் வருகிற 27 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தோல்நோய் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இந்த முகாமில் தோல் மற்றும் அழகியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.ஆறுமுகக்கனி பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார். முகாமின்போது முகப்பரு, முககருப்பு, மங்கு, வீட்டிலிகோ/வெண்புள்ளி, அலர்ஜி, நகக்குறைபாடு, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ், முடி உதிர்தல், வழுக்கை, இளநரை, […]
தமிழ் அறிஞர், சிந்தனையாளர் என பன்முக திறமை கொண்டவர் அவ்வை நடராஜன். இவர் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவ்வை நடராஜன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவ்வை நடராஜனுக்கு டாக்டர் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் […]
தூத்துக்குடிக்கு புதிய விரைவு ரெயில்கள்; தென்னக ரெயில்வே மேலாளரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை
சென்னையில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை கனிமொழி எம்.பி. சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள ரெயில்வே திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- சென்னை – தூத்துக்குடி இடையே ஒரே ஒரு விரைவு ரெயில் (முத்து நகர் எக்ஸ்பிரஸ்) மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை-தூத்துக்குடி இடையே தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக புதிய விரைவு ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். திருநெல்வேலி- தூத்துக்குடி- திருநெல்வேலி […]
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் அணிக்கு வரலாம்; டி,ஜெயக்குமார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள், ஏன் இப்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரலாம். இப்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள உள்ளவார்கள், அவர்களுடன் ஒன்றுமையாக உள்ளனரா என்றால் கிடையாது. அவர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் இருந்துள்ளார். சசிகலா குடும்பத்தை எதிர்த்து அவர் தர்மயுத்தம் நடத்தினார். […]
தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் ஒன்று […]
தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரெயில்வே மேலாளரை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ரெயில்வேயில் புதிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும், ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளது அந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இரண்டாவது விமான நிலைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆறு […]
அரசு கேபிள் டி.வி.யில் சிக்னல் செயலிழப்பு செய்யப்பட்டுள்ளதால் தொழில் நுட்ப உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது […]
தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டம் வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாலாட்டின்புதூர் கோகுலம் திருமண்டபத்தில் வரும் 24 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழகச் […]