கோவில்பட்டியில் தோல்நோய் மருத்துவ சிகிச்சை முகாம்; சுதிக் ஷா பிரபு மருத்துவமனையில் 27 ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டி செக்கன் ஊரணி தெருவில் உள்ள சுதிக் ஷா பிரபு மருத்துவமனையில் வருகிற 27 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தோல்நோய் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இந்த முகாமில் தோல் மற்றும் அழகியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.ஆறுமுகக்கனி பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார்.
முகாமின்போது முகப்பரு, முககருப்பு, மங்கு, வீட்டிலிகோ/வெண்புள்ளி, அலர்ஜி, நகக்குறைபாடு, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ், முடி உதிர்தல், வழுக்கை, இளநரை, சொரியாசிஸ், நீர் கொப்புளம், தொழுநோய் போன்றவற்ற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது,.
சிகிச்சையை தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
மேற்கண்ட தகவல்களை டாக்டர்கள் ஆர்.பிரபு, எம்.ராஜேஸ்வரி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
