தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் தூத்துக்குடி வரதராஜபுரம் சீர்மிகு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மூலம் குழந்தைகளின் உயரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தனர்.தொடர்ந்து ரகுமத்துல்லாபுரம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.போல்டன்புரம் கக்கன் பூங்கா அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் […]
தவறான சிகிச்சையால் இறந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்துக்கு அரசு உதவி’; சகோதரருக்கு அரசு
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார்.இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார். இது தொடர்பாக கூறிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு […]
மயிலாடுதுறை, சீர்காழியில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு;மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் கடந்த 11-ந் தேதி இரவு 44 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது.இதனால் குடியிருப்புகள், விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தாங்க வைக்கப்பட்டனர்.சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.இந்த […]
நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.85 மாவட்டச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது.அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது.இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் […]
கிணற்றில் விழுந்த கோழியை காப்பாற்ற முயன்ற முதியவர் வெளியே வரமுடியாமல் தவிப்பு; தீயணைப்பு
கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனம் பஞ்சாயத்து நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நல்லப்ப நாயக்கர் (வயது 90). விவசாயி. இவருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் கண்ணன் (வயது 46) என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர்.இவர் மனைவி லட்சுமி அம்மாள், மகன் கண்ணன் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகின்றனர். நேற்று வீட்டில் வளர்த்து வந்த கோழி ஒன்று இவருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்துவிட்டது. அதை மீட்பதற்காக நல்லப்ப நாயக்கர் கிணற்றில் குதித்து விட்டார். […]
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக […]
அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆடத் தெரியாத ஆரணங்கு கூடம் கோணல் என்று புலம்புவது போல்,இந்த விடியா தி.மு.க. அரசில் வெட்டியாக வலம் வரும் அன்பரசன் என்ற மந்திரி, முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது பாடீநுந்திருக்கிறார். வெள்ளத்தில் தவிக்கும் தன் தொகுதி மக்களை காப்பாற்ற வக்கில்லாத, வகையில்லாத, கிடைத்த பதவியை தன் சுகபோக வாடிநவிற்காகவே பயன்படுத்தும் இந்த சுயநல மனிதர்,எங்கள் […]
கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம். துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் […]
கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் நெல்லையப்பன், கிளை தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோட்ட செயலாளர் பூராஜா, கிளை செயலாளர்கள் பிச்சையா, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கோட்ட பொருளாளர் முருகன், கிளை பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ரூ.5 […]