ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: அங்கன்வாடி மையத்தில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் தூத்துக்குடி வரதராஜபுரம் சீர்மிகு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மூலம் குழந்தைகளின் உயரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து ரகுமத்துல்லாபுரம் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
போல்டன்புரம் கக்கன் பூங்கா அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதியை பார்வையிட்ட பிறகு தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் இ-சேவை மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
துத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ , கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் , சார் ஆட்சியர் கவுரவ் குமார் ,தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி ஆகியோர் உடன் சென்றனர்,
