• June 7, 2025

Month: September 2022

செய்திகள்

பெரியார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை; ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு படம் வைக்கப்பட்டது

பெரியார் பிறந்த நாளான இன்று (செப்.17) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார்.அப்போது சிலையின் கீழ் […]

கோவில்பட்டி

பா.ஜனதா கட்சியினர் ரத்ததானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.ரத்ததான முகாமை பாரதீய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தொடக்கி வைத்தார், 25க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.மருத்துவர் தேவசேனா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரொடி, மாவட்ட செயலாளர் ஜெயஹர்ஷன், மாவட்ட துணைச்செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் பொன்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாரத்குமார்,ஆனந்த், காசிராஜன், பா.ஜனதா நகர […]

செய்திகள்

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு `சீல்’

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க ஒரு பெட்டிக்கடைக்காரர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் தின்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்த நல்லூர் […]

தூத்துக்குடி

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை; கோரிக்கை மனு

தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர் உள்ளிட்ட பலருக்கு, அவர்களை நினைவு கூறும் வகையிலும், வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையிலும் பல இடங்களில் மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட நேதாஜி சுபாஷ் […]

தூத்துக்குடி

பெண்ணை கடத்தி கற்பழிப்பு: ரவுடி உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் முருகன் என்ற கட்டை முருகன் (வயது 27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 18 வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவரும், அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி

ஓசோன் படலத்தை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கோவில்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்ட்டது. கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பாபு ஆகியோர் முன்னிலை […]

செய்திகள்

மதுரையில் தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா; மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தென்மண்டல அளவிலான மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.பின்னர் பேசுகையில் அவர் கூறியதாவது ;-தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் தான்.தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது. மதுரையில் இயங்கி வரும் 50,000 சிறு […]

செய்திகள்

அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி.ஜெயக்குமார் பாட்டுப்பாடினார்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திரு.வி.க.நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது டி.ஜெயக்குமார் பேசியதாவது:-திமுக அரசு ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மக்களை பழி வாங்க வேண்டும் என்ற வகையிலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையிலும், ஆளும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு , மின்சார கட்டண உயர்வு என்று பல […]

செய்திகள்

மதுரையில் இருந்து சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றம்

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த […]

செய்திகள்

தி.மு.க.வின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி பேச்சு

மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:-தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றது முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக […]