செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இதனிடையே பூஜாகோயல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையாததால் தங்களால் வெளியேற முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தனர். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என படக்குழு தலைப்பிட்டுள்ளது . ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.அத்துடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று […]
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.அதன்படி ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் இன்று கமல்ஹாசன் கலந்துகொண்டார்.படப்பிடிப்பு தளத்தில் […]
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில், திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரது நாக்கை அறுத்து […]
தி.மு.க.உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் […]
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு திண்டுக்கல், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீராடிவிட்டு செல்வது வழக்கம்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் விழும். கடந்த மாதம் 3-ந்தேதி நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் விழுந்தது. அந்த சமயத்தில் தாண்டிக்குடியில் தனியார் எஸ்டேட்டில் வேலைபார்த்த பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பருடன் அங்கு நீராட சென்றார்.அப்போது ஆபத்தை உணராமல் […]
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா, ஆண்ட்ரியா ஆகியோர் ஏற்கனவே கோல்டன் விசா பெற்றுள்ளனர்.இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், ஊர்வசி ரவுடாலா, […]
சிறுநீரகங்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி; சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் பெஞ்சமின் கண்ணீர்
காமெடி நடிகர் போண்டாமணி 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து சில தொலைக்காட்சி தொடர்களிலும், கேம் ஷோக்களிலும் அவர் நடித்து வந்தார்.சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து […]
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-, தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் […]
ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை (22-ந்தேதி) காலை 8:30 மணிக்கு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கோவில்பட்டி நகர ம.தி.மு.க. சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி அளவில் கதிரேசன் மலை முதியோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கொடியேற்றும் இடங்கள்: 1.காந்தி மைதானம் 2.ஸ்டாலின் காலனி 3.பழனி […]