• June 7, 2025

புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தடை

 புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு திண்டுக்கல், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீராடிவிட்டு செல்வது வழக்கம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் விழும். கடந்த மாதம் 3-ந்தேதி நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் விழுந்தது. அந்த சமயத்தில் தாண்டிக்குடியில் தனியார் எஸ்டேட்டில் வேலைபார்த்த பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பருடன் அங்கு நீராட சென்றார்.
அப்போது ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் நின்று தனது நண்பரை விடியோ எடுக்க சொல்லி போஸ் கொடுத்து கொண்டிருந்தார் அஜய் பாண்டியன். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக கால் தவறி நூறு அடி உயரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து உருண்டு கீழே விழுந்தார்.
இது பற்றி அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்த அ்ஜய் பாண்டியனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையின் போது 9-ந் தேதி மீட்கப்பட்டார்.
இந்த் நிலையில் புல்லா வெளி நீர்வீழ்ச்சிக்கு
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வனத்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *