• June 8, 2025

Month: September 2022

செய்திகள்

3 நாட்களாக போராட்டம்:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர்களுடன் நிர்வாகம் பேச்சு நடத்த நாம்

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் த.இரமேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-புதுச்சேரி மத்திய நிறுவனமான ஜிப்மர் நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 550 க்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள்கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மாதந்திர ஊதியத்திற்குரிய சம்பள ரசீது வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜிப்மர் நிர்வாகம் நடைமுறைபடுத்த வேண்டும் என்பன போன்ற […]

கோவில்பட்டி

பத்திர காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா: விமான கோபுரங்களுக்கு அபிஷேகம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொன்னம்பல நாடார் கலையரங்கம் முன்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், செயலாளர் மாணிக்கம், சங்க துணை தலைவர் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை; அறங்காவலர் குழு தலைவர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம், விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், தற்போது பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் பணியாளர்களிடம் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கோவில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டிக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்; தந்தை-மகள் கைது

கர்நாடக மாநிலம் பெங்களுரூவிலிருந்து கோவில்பட்டிக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் காய்கறிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்தன. அவற்றை அப்புறப்படுத்தி பார்த்தபோது அதற்கு கீழ்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3 ஆயிரத்து 630 பாக்கெட்டுகள் பதுக்கி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; ரூ.2 லட்சம் வாத்து முட்டைகள்

தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கிளம்பியது. மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் உதவியாளராக வந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநெல்வேலி செல்லும் சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தில் இன்று காலை வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மினி லாரியில் இருந்த ரூ. 2 லட்சம் […]

கோவில்பட்டி

1 கோடி மரக்கன்றுகள் நடும் பணி : விளாத்திகுளத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும் வென்றான், அயன் பொம்மையாபுரம், உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன,இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் விளாத்திகுளத்தில் கூடுதல் ஆட்சியர் வி.சரவணன் தலைமையில் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 15-ந்தேதி, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி வியாழக்கிழமை நடக்கிறது.கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் தெரிவித்து உள்ளார்

கோவில்பட்டி

தேசிய பசுமை படை மாணவர்களின் சூழலியல் சுற்றுலா; 3 ஆண்டுக்கு பிறகு குருமலை

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை சார்பில் தேசிய பசுமை படை மாணவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான சூழலியல் சுற்றுலா கோவில்பட்டியில் தொடங்கி குருமலை வனப்பகுதி வரை நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை சார்பில் தேசிய பசுமை படை,சுற்றுச்சூழல் மன்றங்களின் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி பேச்சுப்போட்டி,ஓவியம்,கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு காலமாக […]

கோவில்பட்டி

புதிய கல்விக்கொள்கை: கோவில்பட்டியில் கருத்து கேட்பு கூட்டம்

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி அ.சின்ன ராசு தலைமை தாங்கினார்.கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால், சமூக ஆர்வலர் வெங்கடம்மாள் ஆகியோர் […]

தூத்துக்குடி

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா (அ.தி.மு.க)

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. 12 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சத்யா தலைவராகவும், துணைத் தலைவராக செல்வகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில் துணைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தலைவராக […]