• June 8, 2025

1 கோடி மரக்கன்றுகள் நடும் பணி : விளாத்திகுளத்தில் ஆய்வு கூட்டம்

 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணி : விளாத்திகுளத்தில் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும் வென்றான், அயன் பொம்மையாபுரம், உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன,
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் விளாத்திகுளத்தில் கூடுதல் ஆட்சியர் வி.சரவணன் தலைமையில் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கி பேசினார
கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், வட்டாட்சியர்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராகவன், சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *