கோவில்பட்டியில் 15-ந்தேதி, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி வியாழக்கிழமை நடக்கிறது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் தெரிவித்து உள்ளார்
