• June 7, 2025

Month: June 2022

செய்திகள்

10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2௦-ந் தேதி வெளியாகிறது

2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20- ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. […]

ஆன்மிகம்

தாமிரபரணி கரையோர நவ கைலாய சிவாலயங்கள்…

தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார். பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் […]

தூத்துக்குடி

சைபர் குற்ற பிரிவு புகார்கள் மீதான நடவடிக்கை பற்றி பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் சம்மந்தமான வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் (Cyber Supporting Officer) அடங்கிய குழுவினரை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு அந்தந்த காவல் நிலையங்களிலேயே சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்களை பெறுவது குறித்தும், […]

தூத்துக்குடி

புகையிலை பொருட்கள் விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 38 கடைகளுக்கு `சீல்’

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எல். பாலாஜி சரவணன் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு […]

செய்திகள்

அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒற்றை தலைமை முறை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.வருகிற 23-ந் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு பற்றி ஆலோசிக்க கூடிய இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதே கருத்தை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலோர் வலியுறுத்தி பேசினார்கள்.இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]

தூத்துக்குடி

எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்ததால் தூத்துக்குடி மீனவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 950 கி.மீ நீள கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடைவிதித்து வருகிறது.நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் ஏப்ரல் 14ம்தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காலம் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுழற்சி முறையில் 130 விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். இரவு 9 […]

கோவில்பட்டி

பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு கோட்டாட்சியர் அறிவுரை

கோவில்பட்டி அருகே எம்.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 2௦ ஆண்டுகளுக்கு முன்பு இவரது நிலத்தை கண்மாய் அமைப்பதற்கு கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு அரசு தரப்பில் இருந்து நஷ்ட ஈடு இன்னும் தரப்படவில்லையாம். இதனால் சண்முகம் இன்று காலை தனது மனைவி மற்றும் பள்ளிமாணவனான மகனுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.கையகப்படுத்திய நிலத்துக்கு நஷ்டஈடு வேண்டி கையில் 3 பேரும் தட்டு ஏந்தி தரையில் அமர்ந்து இருந்தனர். இது பற்றி அறிந்த கோட்டாட்சியர் மகாலட்சுமி, அவர்கள் […]

கோவில்பட்டி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் 4 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலையூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஸ்டோர் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் வள்ளுவர் நகரைச சேர்ந்த சக்திவேல் (47), கூசாலிபட்டி சங்கரநாராயணன் (40), தெற்கு திட்டங்குளம் திராவிடசெல்வம் (59) கோவில்பட்டி லாயல்மில்காலனி ராஜபாண்டி (41) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.இதை […]

செய்திகள்

டாக்டர் பட்டம் பெற்ற பரமக்குடி மாணவருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா.இந்த மாணவருக்கு சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.இளம் வயதில் கார் பற்றிய பல விஷயங்களை மிகவும் துல்லியமாக கூறி வருவதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே ஆசியா புக் ஆப் ரிக்கார்டு , இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்டு ,தி […]

செய்திகள்

அவமதிப்பு புகார்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின வகுப்பை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதுமேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க […]