அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நேற்று ஒ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர்.இதேபோல எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.அதே […]
தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுகொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள்ளார்.
பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு தடவை பகுதிவாரியாக ,மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. காலையில் இருந்து மாலை வரை மின் தடை செய்யாமல் எந்த பணி நடக்கும் இடத்தில் மட்டும் மின்தடை செய்துவிட்டு பணி முடிந்தவுடன் மின் சப்ளை கொடுத்து விட முடியும். அனால் மின்வாரிய அதிகாரிகள் அப்படி செய்வது கிடையாது.கடந்த வெள்ளிக்கிழமை (17.6.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின் நிலையங்களில் இருந்து […]
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பகலில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :- கேள்வி:-அதிமுக வில் ஒற்றைத் தலைமை குறித்து…. பதில்: காலத்தின் கட்டாயம். அதாவது காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். பொதுவாக அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர்களின் எண்ணம் ஒற்றைத் தலைமை என்ற கருத்துள்ளது. அது தற்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான […]
தட்சிணாமூர்த்தி என்பவர் யார், குரு பகவான் என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு […]
தூத்துக்குடியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன,அதேபோல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தெற்கிலிருந்து வரும் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்துதான் மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்கின்றன.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து வந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 தேர்தல்: வேட்புமனு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம ஊராட்சி தலைவர் பதவி மற்றும் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) […]
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் தெற்கு திட்டங்குளம் ஊர் எல்லையில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது எட்டயபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணகட்டை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மோட்டார்சைக்கிளில் 3 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தாப்பாத்தி கிராமத்திலுள்ள ராமசாமி மனைவி சண்முகத்தாயிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் தாப்பாத்தி […]
தமிழகத்தில் 10 ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.*10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம்*பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 97.27 […]
அ.தி.மு.க ஒற்றை தலைமை சுமுகமாக முடியும்- பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 23 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு கூட்டம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 11 பேர் கொண்ட குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் 18 ம் தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் […]